Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்க்கிங்கில் பைக்கை நிறுத்துறீங்களா? போலீஸ் வெளியிட்ட முக்கிய வார்னிங்.. பாய போகும் அபராதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மால்கள், கடைகள் போன்ற இடங்களில் உள்ள பார்க்கிங்கில் பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகிறீர்கள் என்றால் இனி கொஞ்சம் யோசித்து நிறுத்துங்கள். ஏனென்றால் அபராதம் விதிக்க போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக குறைவாக இருந்த அபராத கட்டணங்கள் பல உயர்த்தப்பட்டு உள்ளன.

Dont fail to obey this particular traffic rule in Tamil Nadu while parking the vehicles

உதாரணமாக ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம்.

இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்னொரு விதிமீறல் ஒன்றிற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மால்கள், கடைகள் போன்ற இடங்களில் உள்ள பார்க்கிங்கில் பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகிறீர்கள் என்றால் இனி கொஞ்சம் யோசித்து நிறுத்துங்கள். ஏனென்றால் அபராதம் விதிக்க போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என்றால் அதற்கு பார்க்கிங்கில் வைத்தே போலீஸ் அபராதம் விதிக்க தொடங்கி உள்ளது. முன்பெல்லாம் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என்றால் அதை சாலையில் பார்த்து, வாகனங்களை நிறுத்தி, அதன்பின் பைன் போடுவார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. போலீஸ் குழு குழுவாக பார்க்கிங் உள்ளே சென்று சோதனை செய்வார்கள். அங்கே இருக்கும் வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி உள்ள வாகனங்களை சோதனை செய்வார்கள்.

அதில் தவறான நம்பர் பிளேட் இருக்கும் வாகனங்களை கண்டுபிடித்து பைன் விதிப்பார்கள். கார்களுக்கும் இது பொருந்தும். இதற்கான பில் உங்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.

இதை ஒரு முறை கட்ட தவறினால் அடுத்த முறை 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சென்னையில் டிராபிக் சிக்னல்களில் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டி நிற்க கூடாது. அப்படி நின்றால் அது விதி மீறல். இந்த குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் இந்த குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இனி 500 ரூபாய் வாங்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Dont fail to obey this particular traffic rule in Tamil Nadu while parking the vehicles

இது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாப்லைன்' கோட்டை தாண்ட கூடாது என்பது தொடர்பாக நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார் மேற்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+