₹ தேவநாகரி எழுத்து என்பதால் பட்ஜெட்டில் ரூபாய் லோகோவை தமிழில் மாற்றினோம்- ஜெயரஞ்சன் அசால்ட் விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூபாய் லோகோ மாற்றப்பட்டுள்ளது மிகப் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூபாய்க்கான குறியீடான ₹ என்ற இலச்சினை பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக தமிழில் ரூபாய் என எழுதப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் ரூ என்ற குறியீடு தமிழக பட்ஜெட்டில் பயன்படுத்தப்படுவது குறித்து தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவரான பொருளியல் அறிஞர் முனைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025- நாளை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் நாளைய பட்ஜெட்டில் அதிரடியான சலுகைகளை உள்ளடக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு முதல் முறையாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார ஆயறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்னர் திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக ஜெயரஞ்சன் கூறியதாவது: பொதுவாக பட்ஜெட்டில் நிதிநிலை குறித்த விவரங்கள் இடம் பெறும்; மத்திய அரசிடம் கிடைக்கப் பெற்ற நிதி எவ்வளவு? தமிழ்நாட்டுக்கான வருமானம் எவ்வளவு? உள்ளிட்டவை இடம் பெறும். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஒவ்வொரு துறையிலும் எத்தகைய மாற்றங்கள் உருவாகி இருக்கிறது என்பதை விளக்குவதுதான் பொருளாதார ஆய்வறிக்கை.
சட்டசபையில் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம்; ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமையை விவரிக்கிறது இந்த பொருளாதார ஆய்வறிக்கை. அதாவது தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லக் கூடியதுதான் பொருளாதார ஆய்வறிக்கை.
#WATCH | "We don't want to use the Devnagri. That's all," says Tamil Nadu State Planning Commission Executive Vice-Chairman Dr J. Jeyaranjan on Tamil Nadu govt replacing the Rupee symbol (₹) with Tamil 'Ru' symbol representing the same on its Tamil Nadu Budget 2025-26 pic.twitter.com/rqtAeVcV9e
— ANI (@ANI) March 13, 2025
உதாரணமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% என்ற அளவில் நிலையாக இருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சி எப்படியான மாற்றம் அடையும் என்பதை சொல்கிறது ஆய்வறிக்கை. தனிநபர் வருமான, சர்வதேச சிக்கல்களின் தாக்கம் ஆகியவற்றையும் பொருளாதார அறிக்கை பேசுகிறது. இவ்வாறு முனைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட்டில் ₹ என்ற ரூபாய் லோகோ மாற்றப்பட்டு ரூபாய் என்பதைக் குறிப்பிடும் வகையில் தமிழில் ரூ என ஏன் குறிப்பிடப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரே வரியில், தேவநாகரி (இந்தி. சமஸ்கிருத எழுத்துகளை எழுதப் பயன்படுத்துகிற முறை) எழுத்தான ₹ என்பதால் அதனைத் தவிர்த்து தமிழில் ரூ என பயன்படுத்துகிறோம் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications