தமிழகத்தில் ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு 2.70 லட்சமாக உயரும்.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வில் தகவல்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக உயரும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும், எத்தனை பேருக்கு தொற்று பரவும்?
எத்தனை பேர் இறக்க நேரிடும் என்பது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஊரடங்கு
இந்த ஆய்வு முடிவில் சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தே கொரோனாவின் 2ஆவது அலை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2.70 லட்சம்
இதனால் சென்னையில் கொரோனா உச்சநிலையை அடையும் வேகம் குறையும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநிலையை அடையும் . இன்னும் சில வாரங்களில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

சென்னை
அந்த 2.70 லட்சம் பேரில் 60 சதவீதம் சென்னையில் இருக்கும். இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தொற்றுநோய்த் துறைத் தலைவர் டாக்டர் ஜி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கூறுகையில், சென்னையில் ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்.

உச்சநிலை
இந்த எண்ணிக்கை ஜூலை 15 இல் 1.5 லட்சமாக அதிகரிக்கலாம். எங்கள் கணிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்தை எட்டும், தமிழகம் முழுவதும் 1.22 லட்சமாக உயரும். ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் 71,715 பேருக்கும் தமிழகத்தில் 1.29 லட்சம் பேருக்கும் நோய் பரவும். சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி 1.50 லட்சம் பேருக்கு கொரோனா பரவல் இருக்கும். தமிழகத்தில் 2.76 லட்சமாக பரவும் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் கொரோனா உச்ச நிலையை அடைந்த பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். ஊரடங்கின் விளைவுகளை இன்னும் 10 நாட்களில் காணலாம் என்றார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications