தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்-வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்- பெண் வாக்காளர்கள் அதிகம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். மொத்தம் 3.10 கோடி பெண்வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.52 லட்சம் பேர் வாக்காளர்கள். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இது. கீழ்வேளூர் தொகுதியில் மிக குறைவாக 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 6.2 கோடி பேர் வாக்காளர்கள் இருந்தனர். இந்த ஆண்டு வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளடு.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவையும் இன்றே தொடங்கப்பட உள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அனைவருமே தங்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னர் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவை வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் ஆணைய இணையத்திலும் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.
மேலும் நவம்பர் மாதத்தில் மொத்தம் 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் முதல் விண்ணப்பங்கள் பெறுதல் வரையிலான பணிகள் டிசம்பர் 9-ந் தேதி முடிவடையும். பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 5-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications