ஆளுநர் ரவிக்கு 1000 அஞ்சல் அட்டைகள்.. கைப்பட எழுதிய வாசகம்! திராவிடர் விடுதலைக் கழகம் போராட்டம்!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'தெக்கனமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா கொண்டாட்டத்துடன், 'இந்தி மாத கொண்டாட்டம்' நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநரை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் என திராவிட விடுதலைக் கழகத்தினர் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications