குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் குடும்ப பின்னணி. உருக்கமான தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் குடும்ப பின்னணி நெஞ்சை பதற வைக்கிறது. 20 ஆண்டுகள் குவைத்தில் பணிபுரிந்தவர், சொந்த ஊருக்கு திரும்ப விமான டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தவர் என ஒவ்வொருவரது நிலைமையும் பெரும் துயரத்தைத் தருகிறது.

குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாடு கொண்டு வரப்படுகிறது. குவைத்தில் மொத்தம் 45 இந்தியர்கள் பலியாகினர். 45 இந்தியர் உடல்களுடன் இன்று அதிகாலை இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் கொச்சியில் இருந்து புறப்பட்டது.

Kuwait Fire Accident


குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர் விவரம்:

கோவில்பட்டி மாரியப்பன்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 41). குவைத்தில் 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். 11 வயதில் விமலா என்ற மகளும் 7 வயதில் கதிர் நிலவன் என்ற மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம்தான் வானரமுட்டி கோவில் திருவிழாவுக்கு வந்துவிட்டு மீண்டும் குவைத் சென்றார் மாரியப்பன்.

ராமநாதபுரம் ராமு: 26 ஆண்டுகளாக குவைத்தில் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார் ராமு (வயது 65). இவரது விசா காலம் கடந்த 11-ந் தேதி முடிவடைந்தது. ஆனால் இந்தியா திரும்ப விமான டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தார். கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் குவைத் திரும்பியதும் 26 ஆண்டுகால உழைப்பின் பணப் பலன்களுடன் சொந்த ஊ திரும்ப காத்திருந்த ராமு இப்போது கருகிய உடலாக திரும்புகிறார்.

கடலூர் சின்னதுரை: கடலூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. சின்னதுரைக்கு குழந்தை இல்லை. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார் சின்னதுரை. ஆனால் சின்னதுரையை பணிக்கு வரவேண்டும் என அவரது நிறுவனம் வற்புறுத்தி அழைத்ததால் அண்மையில்தான் மீண்டும் குவைத் சென்றாராம் சின்னதுரை. அடுத்த 2 வாரங்களில் நாடு திரும்ப இருந்த நிலையில் சடலமாக முட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்படுகிறார் சின்னதுரை.

செஞ்சி முகமது ஷெரீப்: செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் முகமது ஷெரீப். 2 பெண் குழந்தைகளின் தந்தையான ஷெரீப் குவைத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.

திருச்சி ராஜூ: திருச்சி நவல்பட்டைச் சேர்ந்தவர் 53 வயது ராஜூ. 12 ஆண்டுகளாக கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இப்படித்தான் உயிரிழந்த 7 தமிழரின் குடும்ப பின்னணியும் நெஞ்சை பிழிய வைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+