வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. ‛லுக் அவுட்’ நோட்டீஸ்
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் டெல்லி கைலாஷ்பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு இந்த போதைப்பொருள் கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் அமைப்பாளராக செயல்படுவது தெரியவந்தது. அவரை கைது செய்ய அதிகாரிகள் விரைந்தனர்.
இதையடுத்த ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் தான் தேடப்படுவதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவானர். அவரது தேடி சென்னை வந்த அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்தனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது வரை ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவர் வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனால் அவர் வெளிநாடு தப்பித்த செல்ல திட்டமிடலாம் என மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இதற்கிடையே தான் ஜாபர் சாதிக் இந்தியாவை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் அவரது போட்டோவுடன் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி அவர் விமான நிலையம் சென்று வெளிநாடு செல்ல முயன்றால் அதுபற்றிய தகவல் உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை குழுவுக்கு வழங்குவார்கள். இதன்மூலம் ஜாபர் சாதிக்கிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் செக் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications