கடையை இனி மூடக்கூடாது.. தேங்காய் உடைத்து சூடம் ஏற்றிய குடிக்காரர்.. சாக்லேட் கொடுத்தும் கொண்டாட்டம்
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு கற்பூரம் ஏற்றி சூரக்காய் உடைத்து கடைத் திறப்பை குடிக்காரர் ஒருவர் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.
அதில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மற்ற கடைகள் திறக்கப்படாமல் மதுக்கடைகள் திறப்பதால் தற்போது குறைந்து காணப்படும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்தனர்.

தொற்று குறைந்த மாவட்டங்கள்
இந்த நிலையில் தொற்று குறைவான மாவட்டங்களில் மட்டுமே இந்த கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை வாங்க டோக்கன் கொடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

சாக்லேட்
அதன்படி டோக்கன் பெற்ற ஒரு குடிக்காரர், காட்பாடி வள்ளிமலை பகுதி மதுக்கடை திறக்கப்பட்டதால் பள்ளி குழந்தை போல குஷியான அவர் தேங்காய் உடைத்து வழிபட்டது மட்டுமல்லாமல் சாக்லெட் கொடுத்து கொண்டாடியுள்ளார்.

கடைகள்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நிறைய இடங்களில் கடைகள் திறந்த நிலையில் சாரங்கள் கட்டப்பட்டு சமூக இடைவெளிக்காக வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மாஸ்க் அணியாதோருக்கு மதுபானம் கொடுக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆரவாரம்
நிறைய மதுப்பிரியர்கள் பாட்டிலை வாங்கியவுடன் அதற்கு முத்தமிட்டு கொண்டும் நடனம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு மாதம் கழித்து பாட்டிலை கையில் பார்த்தவுடன் அவர்கள் ஆரவாரமாக இருந்த காட்சிகள் வைரலாகியுள்ளன.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications