கர்நாடகாவில் என்னை கொலை செய்ய பார்த்தாங்க.. வீடியோ போட்டு பரபரப்பை கிளப்பிய டிடிஎப் வாசன்! என்னாச்சு
சென்னை: கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது இங்கே குளிக்க கூடாது என்று கூறி தன்னை போதையில் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார். போதையில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக கூறியுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். பிரபல பைக் ரைடரான இவர், பைக் ஓட்டும் போது தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானவர்கள் யூடியூப்பில் பாலோ செய்து வந்தனர். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டு வந்ததால் டிடிஎப் வாசனின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து பைக் சாகச வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் டிடிஎப் வாசன், அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அண்மையில் திருப்பதியில் கோவிலுக்கு சென்ற போது பக்தர்களிடம் பிராங்க் செய்து வம்பில் சிக்கினார். இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் டிடிஎப் வாசன் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போதையில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக கூறியுள்ளார். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு போதையில் வந்த நபர் ஒருவர், இது தங்களுக்கு சொந்தமான இடம், இங்கே குளிக்க கூடாது என்று சொன்னதாகவும் அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போதே இரும்பு கம்பியால் தன்னை ஒருவர் குத்தியதாக சொல்லியிருக்கிறார் டிடிஎப் வாசன்.

லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும், இதனால் தான் இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே கடவுள் புண்ணியம் தான் எனவும் டிடிஎப் வாசன் அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.. இது தொடர்பக வீடியோ ஒன்றையும் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications