திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்திருந்த மதிமுக, தனது சொந்த சின்னத்தில் நிற்பதற்கு எவ்வளவோ மன்றாடியது என்றும், ஆனால் திமுகவின் நிர்பந்தத்தின் பேரில்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் துரை வைகோ கூறியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்ட திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் தற்போது தவெக பக்கம் தாவியிருக்கின்றன. ஒருவேளை மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால், அக்கட்சிக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் இந்த வாய்ப்பு தவறியுள்ளது.

இதன் வெளிப்பாடாக, திமுக சின்னத்தில் போட்டியிட்டது குறித்து மிகவும் அப்செட்டாக பேசி வருகிறார் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ. இன்று இது குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் திமுகவை டார்கெட் செய்திருக்கிறது.
துரை வைகோ பேசியது
"எங்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிடுவதற்காக, நாங்கள் திமுகவிடம் எவ்வளவோ முறையிட்டோம், மன்றாடினோம். ஆனால், வேறு வழி இன்று நிர்பந்தத்தின் காரணமாக நாங்கள் எங்கள் சின்னத்தின் நிற்காமல், திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த நெருக்கடியை எதிர்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியே வந்திருக்கலாமே என்று கேள்விகள் எழலாம்.
தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி கூட்டணியில் இருந்து வெளியே வர முடியும். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. எந்த காரணத்துக்காக கூட்டணி வைத்தோமோ, அந்த காரணமும் அப்படியே இருக்கிறது. இருந்தும் சின்னம் பிரச்சனைக்காக கூட்டணியில் இருந்து வெளியேறி அதன் மூலம் சலசலப்புகளை உருவாக்கி விடக் கூடாது என்று நாங்கள் பொறுமை காத்தோம்." என்று துரை வைகோ கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இதேபோல திமுக சின்னத்தில் போட்டியிட்டது துர்திஷ்டவசமானது என்று பேசியிருந்தார். "கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தமே இதற்குக் காரணம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனவேதனை எங்களின் துரதிர்ஷ்டவசமான செயல் என்பதை ஆயிரம் முறை சொல்வேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!













Click it and Unblock the Notifications