70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த துர்கா ஸ்டாலின்! ஏ டூ இசட் சீர் வரிசைப் பொருட்கள்!
70 ஜோடிகளுக்கு சீர் வரிசைப் பொருட்களுடன் திருமணம் நடத்தி வைத்த சேகர்பாபு.
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
இதேபோல் 70 ஜோடிகளுக்கும் குறைவின்றி ஏ டூ இசட் எல்லா வகையான சீர் வரிசைப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.
இதனிடையே மணமக்களுக்கு சொனாட்டா கைக்கடிகாரம் ஒன்றையும் துர்கா ஸ்டாலின் அன்பளிப்பாக தனிப்பட்ட முறையில் அளித்திருக்கிறார்.

ஸ்டாலின் 70
முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடி வரும் அமைச்சர் சேகர்பாபு 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார். மணமக்களை வாழ்த்தி மாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்தார் துர்கா ஸ்டாலின்.

சீர் வரிசைப் பொருட்கள்
கட்டில், பீரோ, பண்டம் பாத்திரம், என சகல விதமான சீர் வரிசைப் பொருட்களும் எந்த குறையும் இல்லாமல் 70 ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இதேபோல் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை காலை உணவும் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலினை அண்ணியார் என்று வாய் நிறைய அழைத்தார்.

முகூர்த்த நேரம்
அதுமட்டுமல்ல துர்கா ஸ்டாலினை புகழோ புகழ் என்றும் புகழ்ந்தும் பேசினார். முகூர்த்த நேரம் முடிவதற்குள் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தனது உரையை முடித்துக் கொள்வதாக கூறி தனது செண்டிமெண்டையும் அமைச்சர் சேகர்பாபு வெளிப்படுத்தினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் சேகர்பாபுவை புகழ்ந்து பேசினார். சென்னையில் எதிரும் புதிருமாக அரசியல் செய்பவர்கள் இவர்கள் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண விழா
தனது தங்கை மறைவை தொடர்ந்து திருமண விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் கடந்த 15 நாட்களாக செல்லாமல் சோகத்தில் இருந்த துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடத்திவைக்கப்படும் திருமணம் என்பதால் இதில் பழைய உற்சாகத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications