Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

810 பக்க சார்ஜ் ஷீட்.. பெட்டி பெட்டியாக 18000 ஆவணங்கள்.. சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையுடன் 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காமராஜ் வீட்டில் ரெய்டு: அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் சென்னை, மன்னார்குடி, திருவாரூர் என பல இடங்களில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை மேற்கொண்டது லஞ்ச ஒழிப்புத்துறை.

DVAC files charge sheet against admk former minister kamaraj

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.

வழக்குப்பதிவு: இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன், காமராஜின் நண்பர்கள் சந்திரசேகர், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் என ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் அடிப்படியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தமிழ்நாடு சபாநாயகரிடம் அனுமதி பெற்று இந்த வழக்கு தொடர்பாக தற்போது காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை: குற்றப்பத்திரிக்கையுடன் 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணை அடுத்தடுத்து வேகமெடுக்கும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிமுக மாஜிக்கள் மீதான வழக்குகள் வேகமெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+