சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை கால அவகாசம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த ஜூலை 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் இங்கெல்லாம் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை ஜூலை 15-ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தலாம். இணைய தளம் வாயிலாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications