தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடு குறித்து டிச.21,22ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக டிச. 21, 22 ஆகிய தேர்தல்களில் தேர்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுவை, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. தேர்தல் ஆணையமும் தம் பங்குக்கு சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழகம் வருகை தர உள்ளது.
இந்த குழுவினர் டிச.21-ல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல் டிசம்பர் 21-ல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறது இந்த குழு.












Click it and Unblock the Notifications