ஜெகஜ்ஜால மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்- மேலும் ஒரு வழக்கில் அமலாக்கப் பிரிவால் அதிரடி கைது!
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
டெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மற்றொரு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மோசடி புகார்களில் சிக்கிய மோசடி மன்னன் சுகேஷ் எனும் சுகேஷ் சந்திரா எனும் சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதாக கூறி ரூ50 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியவர். தற்போது வரை 20க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் சுகேஷுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், அங்கிருந்தபடியே தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றி வந்தார். தொழிலதிபர் மனைவியிடம் கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக சொல்லியே ரூ200 கோடி மோசடி செய்த திடுக்கிடும் வழக்கும் சுகேஷ் மீது நிலுவையில் இருக்கிறது.
சுகேஷ் சந்திராவின் கூட்டாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் செயல்படார் என்பதும் போலீசாரின் குற்றச்சாட்டு. நடிகைகள் நோரா பதேகி, அருஷா பட்டில், சோபியா சிங் ஆகியோரும் சுகேஷ் வழக்கில் சாட்சியங்களாக உள்ளனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சுகேஷ் சந்திரா அழைத்துவரப்பட்ட போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் புகார் கூறினார். ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ60 கோடி பணம் கொடுத்தேன் எனவும் பரபரப்பை கிளப்பினார்.
டெல்லி திஹார் சிறையில் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் சுகேஷ். இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ளனர். தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ3.5 கோடி மோசடி செய்தார் என்பது அமலாக்கப் பிரிவின் புதிய வழக்கு. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ளது. மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சுகேஷிடம் 9 நாட்கள் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக நேற்று முன் தினம் நீதிமன்ற வாசலில் வைத்து நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரா, காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தது செய்தியானதும் குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications