அடுத்த “டார்கெட்” தலைமை செயலகம்.. அமைச்சர் பொன்முடி அறைக்கு சீல் வைக்க ED முடிவு! நாளை சோதனையா?
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று உள்ளனர்.
செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் இருக்கும் அவரது வீடு, அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, பொன்முடியின் இளைய மகனும் மருத்துவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை என அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி, மனைவி, மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருக்கும்போதே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். அத்துடன் வீட்டில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், முக்கிய ஆவணங்கள் போன்றவை இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
அங்கு சுமார் 3 மணி நேரமாக அமைச்சரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 15 மணி நேரம் கழித்து விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்ற வரும் சோதனை முடிவுக்கு வந்தது. அதே நேரம் விழுப்புரத்தில் பொன்முடியின் கல்வி நிறுவனங்கள், சைதாப்பேட்டை வீட்டில் சோதனை தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இரவே தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்து உள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications