TMB முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.293 கோடி சொத்துகள் முடக்கம்.. என்ன காரணம்?
சென்னை: சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.293.91 கோடி மதிப்பிலான பங்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறையிடம்
புகார் தெரிவித்தது.

சட்டவிரோதமாக முதலீடு
கடந்த 2007, 2011 மற்றும் 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்ட் ஸ்டேட் வங்கியும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து இதில் முக்கிய உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி அதிரடியான புகார்களை கூறி இருந்தது.

முக்கிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. முதற்கட்டமாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முக்கிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையில் நேசமணி மாறன் முத்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே எச்சரிக்கை
தொடர்ந்து அவருக்கு ரூ.35 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை, அபராதத் தொகை செலுத்த தவறினால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் நேசமணிமாறன் முத்துவின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

ரூ. 293.91 கோடி சொத்துகள் முடக்கம்
நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஃபெமா எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துகள் நான்கு இந்திய நிறுவனங்களில் நேசமணிமாறனின் பெயரில் பங்குகளாக இருந்ததாக தெரிகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications