MLA நிதி எங்கே? விசாரித்தால் இப்படி ஒரு தகவல் வருது எனக்கு; அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!
சென்னை: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் ஏன் விடுவிக்கவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக விடுவிக்க வேண்டிய நிதியை டிசம்பர் பிறந்தும் விடுவிக்காதது ஏன் என்றும் இனியும் தாமதம் வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;

எம்.எல்.ஏ. நிதி
''சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜுலை மாதங்களிலேயே விடுவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை நேரடியாக பெற்று உடனடியாக தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை அந்தந்த ஆண்டுக்குள் செய்து முடிப்பார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதமே பிறந்துவிட்டது, ஆனால் 2021-2022-ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இந்த விடியா அரசு வழங்கவில்லை.''

எனக்கு கிடைத்த தகவல்
''சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை என விசாரித்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாகவும், இச்சமயத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்நிதியை பயன்படுத்தி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வார்கள். இதனால் ஆளுங்கட்சியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் இந்நிதியை விடுவிக்கவில்லை என தகவல் கிடைத்துள்ளன.''

ஆளுங்கட்சிப் பிரமுகர்
''உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அந்தப் பகுதிகளை சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் நேரடியாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வழங்குகின்றனர். அரசும் இதற்கு ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.''

ஜனநாயக கடமை
''சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்காமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பளிக்காத மக்கள் நலனில் அக்கறையில்லாத இந்த திமுக அரசு, தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.'' இவ்வாறு இ.பி.எஸ். தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications