அரசியல் காழ்ப்புணர்ச்சி.. விடியா அரசின் பழிவாங்கும் செயல்- பாஸ்கர் வீட்டில் ரெய்டால் கொதித்த ஈபிஎஸ்!
சென்னை : திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் தான் எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து அதிரடி ரெய்டுகளை நடத்தி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடிக்கு நெருக்கம்
கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் கே.பி.பி.பாஸ்கர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

ஈபிஎஸ் கண்டனம்
இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
நாமக்கல் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். 2016 - 2021ஆம் ஆண்டு வரை கேபிபி பாஸ்கர் அவரது மனைவி உமா ஆகியோர் சட்டவிரோதமாக நிலம், நகை, சொத்துகள் வாங்கியது லஞ்ச ஒழிப்பு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7.5 கோடி ரூபாயாக அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

315% அதிகம்
மேலும் 7.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பில் சட்டரீதியாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நகைகளை தவிர சட்டவிரோதமாக 4.72 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கேபிபி பாஸ்கரின் வருமானத்தை விட 315% அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications