எடப்பாடி செய்த 3 தவறு.. டீம் போட்டு காலி செய்த சீமான் + அண்ணாமலை.. இவ்வளவு நடக்குதா பின்னாடி!
சென்னை: அதிமுகவின் வாக்குகளை அண்ணாமலை, சீமான் இருவரும் பிரிக்க போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதை உணராமல் இருக்கிறார், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 3 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.
தமிழ்நாடு - 39 இடங்கள்.
திமுக இந்தியா கூட்டணி- 39(52%)
பாஜக கூட்டணி - 00(19%)
அதிமுக - 00(23%)
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுகவின் வாக்கு சதவிகிதம் 52 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி - 00(19%) வாக்கு சதவிகிதம் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை விட அதிகமாக அதிமுக - 00(23%) வாக்குகளை பெறும் கணிப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு லோக்சபா தேர்தல் கணிப்புகளில் தமிழ்நாட்டில் பாஜக 2- 10 இடங்கள் வரை கூட வெல்லும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இப்போது தேர்தலுக்கு 1 வாரம் கூட இல்லாத நிலையில் எல்லா இடங்களிலும் ஆளும் திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சர்வேக்கள் பல வெளியாகும் நிலையில் தமிழ்நாட்டில் அதிமுகவின் நிலை குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.
அதில்., பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதை உணரவில்லை. அதிமுக வாக்கு நாம் தமிழருக்கும் செல்கிறது. பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் நாம் தமிழருக்கு செல்கின்றனர். நாயுடு, பிற மொழியாளர்கள், பிராமணர்கள் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்கின்றனர். தமிழ் தேசியம், இந்துத்துவா இரண்டும் அதிமுகவை அடிக்கிறது.
இந்துத்துவா இந்த முறை வலிமையாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் ஆதிக்கப்படும். பன்னீர்செல்வத்தை நீங்கியதால் முக்குலதோர் வாக்குகள் அதிமுகவிற்கு எதிராக செல்கின்றன. வெறும் வெள்ளாள கவுண்டர் கட்சியாக எடப்பாடிக்கு எதிராக அதிமுக மாறி உள்ளது.
வன்னியர்களை ஆதரிக்க நினைத்தது பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் இன்னும் பல பிரிவினர்களை பகைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி., இவர்கள் எல்லாம் எடப்பாடிக்கு எதிராக உள்ளனர். எடப்பாடிக்கு கூட்டமே இல்லை. பன்னீரை நீக்கியது தவறு, பாஜகவை விரட்டியது தவறு, பாமகவை நீக்கியது தவறு. இதெல்லாம் எடப்பாடி செய்த மூன்று பெரிய தவறுகள்.
எடப்பாடி உடன் காங்கிரஸ் வராது. பாஜகவையும் விட்டுவிட்டார். விசிகவை நினைத்துக்கொண்டு பாமகவை விட்டுவிட்டார் எடப்பாடி. இப்படி பல தவறுகளை எடப்பாடி செய்து இருக்கிறார். அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சரிவால் சீமான் வேகமாக முன்னேறி வருகிறார். சீமான் தொடர்ந்து தனியாக நிற்கிறார். வெற்றியோ தோல்வியோ அவர் தனியாக நிற்கிறார். அவரின் அரசியல் வெல்வதால்தான் 3 சதவிகித வாக்கு வைத்து இருந்தவர் தற்போது 7 சதவிகித வாக்குகளை பெறும் அளவிற்கு முன்னேறி உள்ளார். வன்னியர் இடங்களில் கூட சீமானுக்கு சாதகமான நிலை உள்ளது.
அதிமுகவின் வாக்குகளை அண்ணாமலை, சீமான் இருவரும் பிரிக்க போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதை உணராமல் இருக்கிறார், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications