நீரும் நெருப்பும் சேர்ந்துடுச்சோ? சட்டசபையில் எடப்பாடிக்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ்.. ஸ்டன் ஆன அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியது கவனம் பெற்றது.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. சபாநாயகரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஆர்பி உதயகுமார்.

Edappadi Palaniswami Sengottaiyan

35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்றதால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த விவாதத்தில், சபாநாயகர் பலமுறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். "நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார்.'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வாக்கெடுப்பு தோல்வி

இந்த வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனாலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 2 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில், டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இரண்டிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவு - 63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவானதால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

சுவாரசிய சம்பவம்

தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியது கவனம் பெற்றது.

கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது? அந்தக் குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா?" எனக் கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமியை இடைமறித்து பதிலளிக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முயன்றபோது அவரை ஓ பன்னீர்செல்வம் மறித்தார்.

உடனடியாக எழுந்து, "கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா?" என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. என்ன இவங்க இரண்டு பேரும் ஒரே விஷயத்தில் ஒன்றாக நிலைப்பாடு எடுத்துள்ளார்கள் என்று பலரும் பார்த்தனர்.

இந்த வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படி அதிமுகவின் எல்லா தரப்பும் பிரிந்தவர்களும் கூட ஒரே நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சமீபகாலமாக உரசல் அதிகரித்திருந்தது. இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையும் நின்று போனது. ஆனால், இந்த முறுகல் நிலை தேவையற்றது. தலைவர்களே இப்படி உள்கட்சி பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று எடப்பாடி மற்றும் செங்கோட்டையனிடம் சீனியர்கள் பேசியிருக்கிறார்கள்.

இதனை செங்கோட்டையன் உணர்ந்தாலும், எடப்பாடி உணர்ந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் 82 பேருடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பலரிடமும் பேசினார் எடப்பாடி. ஆனால், செங்கோட்டையனிடம் எதுவும் பேசவில்லை.

ஆனால் இன்று அதிமுகவின் எல்லா தரப்பும்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்தவர்களும் கூட ஒரே நிலைப்பாட்டை எடுத்தது கவனம் பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+