கூட்டணி ஆட்சி சலசலப்புக்கு நடுவே.. மோடியை ஜூலை 26-ல் சந்திக்கும் எடப்பாடி.. ஆலோசிக்கப்போவது என்ன?
சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களையும் மோடி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியும் கூறி வரும் நிலையில் எடப்பாடி மோடி சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாமகவையும் இந்த கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பாமகவிலேயே தந்தை மகன் மோதல் முடிவுக்கு வராததால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அப்படியே உள்ளன.

இதற்கிடையே தான் பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகை தருகிறார். மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலமாக 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தர உள்ளார். இதன்பின் தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசவுள்ளார்.
இதன் பிறகு தூத்துக்குடியில் விமானம் மூலமாகத் திருச்சி செல்கிறார் பிரதமர் மோடி. பின்னர், 27ஆம் தேதி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்பிறகு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி 5 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பயணங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வரும் 26 ஆம் தேதி மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களையும் அன்றைய தினம் மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியும் கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி - மோடி சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
-
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications