எப்படி சமாளிப்பது.. அவசர அவசரமாக எடப்பாடி போட்ட மீட்டிங்.. அதிர விட்ட செங்கோட்டையன்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அத்திகடவு - அவிநாசி பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது உள்பட கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் சட்டென வெளியே வந்த நிலையில் இந்த ஆலோசனையை எடப்பாடி நடத்தி வருகிறார்.

edappadi palaniswami sengottaiyan

அவசர அவசரமாக எடப்பாடி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எப்படி இதை சமாளிப்பது.. நாம் கட் அவுட் வைக்கவில்லையே . விவசாய சங்கம் வைத்த கட் அவுட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும். இதை ஏன் பெரிதுபடுத்தி பொது வெளியில் பேசுகிறார்கள் என்று செங்கோட்டையன் பற்றி எடப்பாடி பேசியதாக தெரிகிறது.

செங்கோட்டையன் எதிர்ப்பு:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.

புறக்கணிப்பு:

இன்று டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விழாவிற்கும் செங்கோட்டையன் செல்லவில்லை.

ஜெயக்குமார் சமாதானம்:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை. இதை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. நாங்கள் எப்போதும் அவர்கள் புகைப்படத்தை புறக்கணித்தது இல்லை. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாபிறகு நேர்ந்த புறக்கணிப்பு இல்லை என்பதை உணர வேண்டும் என்று செங்கோட்டையன் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பு மூலமாக ஜெயக்குமார் பதிலளித்தார்.


திமுக அட்டாக்:

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரான பின்பு 11 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் கட்சி இருக்கிறதா என்பதை முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளிலே தெரிகிறது. அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வரவே எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டு வருகிறார். தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கூட திமுக கொடியைத்தான் அதிமுக கட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, என்று அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் இதை விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக தொடர் தோல்வி:

அதிமுக தொடர் தோல்வி, தேர்தல் புறக்கணிப்பு காரணமாக கட்சிக்குள் அவருக்கு எதிராக அலை ஏற்பட்டு உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.

இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+