Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலவிளக்கு திட்டத்தை காப்பி அடித்தோமா? அதிமுக தேர்தல் அறிக்கையை காட்டி எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடிக்க வேண்டிய அவசயமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021 சட்டசபைத் தேர்தலின் போதே குலவிளக்கு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இலவச லேப்டாப் திட்டத்தை திமுக செயல்படுத்தி இருப்பதாகவும் விஅம்ர்சித்தார்.

தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாராகி வருகிறது.

Edappadi Palaniswami

சபாநாயகர் கூறிய பின்னரும் பிரச்சனை எழுப்புவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். இதனை ஏற்காத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.

5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. ஜீரோ நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.

6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாகும். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிவிட்டு தமிழக அரசு பின்வாங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசயமில்லை.

மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021 சட்டசபைத் தேர்தலின் போதே அறிவித்தோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும். மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை திமுகவே நிறுத்தி வைத்தது. தற்போது மாணவர்களின் வாக்குகளை பெறவே லேப்டாப்பை கொடுக்கிறது.

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதேபோல் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடும் சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+