Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் பல வருட கனவு! அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வருகிறார் பாருங்க.. அதிபரானதும் செம மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக வைக்கப்படும் ஒரு விஷயத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறைவேற்றி உள்ளார். இதற்கான சட்டத்தை அவர் கொண்டு வர உள்ளார்.

கல்வித்துறையை மாகாண பிரிவிற்கு மாற்றுவதே டிரம்ப் எடுத்துள்ள முடிவு. இதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் கல்வி என்பது பொதுப் பிரிவில் உள்ளது. அதாவது மாநில மற்றும் மத்திய பிரிவு இரண்டிலும் கல்வி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கல்வியை முழுக்க முழுக்க மாநில பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

us presidential election 2024 kamala harris donald trump 2024

எமர்ஜென்சி காலத்தில் கல்வி இப்படி பொதுப்பட்டியலுக்கு சென்றது. இதை தமிழ்நாடு அரசுகள் இத்தனை காலமாக எதிர்த்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் என்று முக்கிய கட்சிகள் கல்வியை மாநில பிரிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகமும் இதே கோரிக்கையை கொள்கையாக அறிவித்து உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக இந்த விஷயத்தை அமெரிக்க அதிபராகி இருக்கும்.. டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளார். அதன்படி அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளாராம். அனைத்து கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம்.

தேசிய அளவில் அங்கே ஒரு கட்சி வென்றால்.. அந்த கட்சிதான் கல்வி கொள்கையை மாற்றுகிறது. இப்போது உதாரணமாக பிடன் வென்ற போது நாடு முழுக்க கல்வி நிறுவனங்களில் ஜனநாயக கட்சி கொள்கை கொண்டு செல்லப்பட்டன. இது டிரம்பின் குடியரசு கட்சிக்கு சிக்கலாக அமைந்தது. முக்கியமாக குடியரசு கட்சி வலுவாக இருக்கும் சிவப்பு மாநிலங்களில் கூட ஜனநாயக கட்சியின் கொள்கைகள் திணிக்கப்பட்டன.

இதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளாராம். அனைத்து கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம். எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி வென்றால் கூட.. குடியரசு கட்சி மாநிலங்களில் எந்த விதமான கல்வி ரீதியிலான மாற்றங்களையும் செய்ய கூடாது என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தேர்தலின் போதே வாக்குறுதியாக டிரம்ப் அறிவித்து இருந்தார். டிரம்பின் அஜெண்டடா47 பிரச்சாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் பள்ளிகளில் இடதுசாரி கொள்கைக்கு அனுமதி இருக்காது. அது தொடர்பாக கல்வி முறைகளை கொண்டு வர தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவிக்க உள்ளாராம்.

டிரம்ப்பின் குடியரசு கட்சி தற்போது அமெரிக்காவில் வலுவாக உள்ளது. முக்கியமாக ஒரு கவுண்டியில் கூட இந்த முறை கமலா ஹாரிஸ் டிரம்ப்பை விட அதிக வாக்குகளை வெல்லவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு வலதுசாரி கொள்கையை நாடு முழுக்க தீவிரமாக கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு மாநில அளவில் பள்ளிகளில் மாநில நிர்வாகத்தின் பவர் இருக்க வேண்டும். இதற்காகவே கல்வியை மாநில பிரிவிற்கு கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளாராம். தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக வைக்கப்படும் இந்த விஷயத்தை அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் கொண்டு வந்திருப்பது.. பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+