Election Exclusive: விஜய்+ஓபிஎஸ்+சசிகலா.. அதிமுகவுக்கு ஆப்படிக்க ரெடியாகும் டீம்! தென்னகத்தை வைத்து சின்னம்மாவின் ப்ளான்
சென்னை: அதிமுகவில் தன்னை சேர்க்காத எடப்பாடி பழனிச்சாமியையும், தன்னை சந்தித்ததற்காக பெண் நிர்வாகியை நீக்கிய டிடிவி தினகரன் மீதும் சசிகலா மிகுந்த கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருக்கும் 25 தொகுதிகளில் விஜய், ஓ பன்னீர்செல்வத்துடன் கூட்டணி அமைத்து சசிகலா போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தனது தம்பி திவாகரனின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மூலம் சசிகலாவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதிமுகவில் அரசியல் வாரிசு விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் கைகோர்த்துள்ள அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் அரசியல் ரீதியாக வீழ்த்த புதிய வியூகம் வகுத்துள்ளதாக பேசப்படுகிறது.

சசிகலா திட்டம்
ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்க வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இருந்தது. ஆனால், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் சட்ட நடவடிக்கைகள், அவரது அரசியல் பயணத்திற்கு ஒரு வகையில் தடையாக அமைந்தன. இதனால் நேரடியாக அரசியலில் முன்வராமல், பின்னணியில் இருந்து இயக்கும் அரசியலை அவர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
2026 தேர்தல்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த சசிகலா, கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் தன்னை ஆதரிக்கும் அரசியல் பிரமுகர்களை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனைகள் நடத்தி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூரில் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அப்போது, என் ஆதரவில்லாமல் தமிழகத்தில் அடுத்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்
பல தலைவர்கள் இதை கேலி செய்தாலும், அதன் பிறகான அரசியல் நகர்வுகள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. அதிமுகவில் இருந்து தன்னை, ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதனை பழனிசாமி முற்றிலும் நிராகரித்தார். பாஜக தலைமை அளித்த அழுத்தத்தால் அமமுகவை மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்த பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.
அதிமுகவுக்கு ஆபத்து
ஓ.பன்னீர்செல்வத்துக்காக பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதோடு, அந்த விவகாரத்தை பேசுபவர்களையும் புறம்தள்ளத் தொடங்கினார். இந்தச் சூழ்நிலையால் கடும் கோபத்தில் இருக்கும் சசிகலா, எடப்பாடி பழனிசாமியையும் டிடிவி தினகரனையும் ஒரே நேரத்தில் வீழ்த்தும் வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, தனது சகோதரர் திவாகரன் பொதுச்செயலராக உள்ள அண்ணா திராவிடர் கழகம் கட்சியை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் தமிழகம்
இந்த கூட்டணியின் மூலம் தென் தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிமுக மற்றும் அமமுகவின் வாக்குகளைப் பிரித்து, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டணியை உறுதி செய்யும் வகையில், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகர், நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
திவாகரன் கட்சி
இதன் மூலம், நேரடியாக அரசியலில் களமிறங்காத போதிலும், சசிகலா பின்னணியில் இருந்து தமிழக அரசியலை கலங்கடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் இந்த வியூகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்கவும் சசிகலா திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. பாஜகவும் ஏமாற்றி விட்டது எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என திட்டவட்டமாக இருக்கிறார். இப்படி தங்களுக்கு எதிராக இருக்கும் நபர்களை பழி வாங்கும் விதமாக தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களை தோற்கடிப்பது தான் சசிகலாவின் திட்டம் எனவும், அதனால் தான் ஓபிஎஸ்ஐ கூட்டணிக்கு அழைத்திருக்கிறார் என்கின்றனர் அவர்து ஆதரவாளர்கள்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications