Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்து எதுவோ.. திமுக அரசை நினைத்தால் பிபி ஏறுது.. மின்கட்டண உயர்வால் நடிகை கஸ்தூரி பரபர விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛சொத்துவரி, பால்பொருள், பருப்பு விலைய ஏத்திய திமுக அரசு மின்கட்டணத்தையும் உயர்த்தியது. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு பிபி ஏறுது'' என நடிகை கஸ்தூரி அதிரடியாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தில் வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை.

சொத்துவரி உயர்வு

சொத்துவரி உயர்வு

அதாவது சமீபகாலமாக தொடர்ச்சியாக வரி உயர்வு, கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜிஎஸ்டியை காரணம் காட்டி ஆவின் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.

கஸ்தூரி மின்கட்டண உயர்வு

கஸ்தூரி மின்கட்டண உயர்வு

இதன் தொடர்ச்சியாக மின்கட்டண உயர்வும் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் வேறு வழியின்றி தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இருப்பினும் முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இது சற்று ஆறுதலான விஷயம்.

மின்கட்டண உயர்வு எவ்வளவு?

மின்கட்டண உயர்வு எவ்வளவு?

இருப்பினும் வீடுகளில் 101 - 200 யூனிட்களுக்கு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆகவும், 201 - 300 யூனிட்களுக்கு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 301 - 400 யூனிட்களுக்கு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆகவும், 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தொழிற்சாலைகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு வழங்கும் யூனிட் மின்சாரத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுகவை நினைத்தால் பிபி ஏறுது

திமுகவை நினைத்தால் பிபி ஏறுது

இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி, திமுக அரசு பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க பால்பொருள் விலை, பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு, மறுபடியும் electrricity கட்டணம் ஏத்திட்டாங்க. இப்போது water sewage கட்டணமும் ஏறிடுச்சு. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது''என திமுக அரசின் செயல்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+