வில்லங்க சான்று.. "இதை" தான் கண்டுபிடிக்க முடியாது.. ஆன்லைனில் ஈஸியாக ஈசி பெறலாம்.. பதிவுத்துறை செம
சென்னை: சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது, வில்லங்க சான்றிதழ் தவிர்க்க முடியாதது.. இந்த வில்லங்க சான்றிதழில் என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியும்? என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியாது? தெரியுமா?
ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மிகப்பெரிய மோசடியாகும்.. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவுவதுதான் பதிவுத்துறை ஆவணம்.
வில்லங்கம்: வில்லங்கம் என்பது, ஒரு சொத்தினை, பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என்ற பல்வேறு விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.. இதைவைத்து, ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக அறிந்து கொள்ளவும் முடியும்.

பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றிதழை பெறுவார்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.. சொத்து யாரிடமிருந்தது? யாரிடம் கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்களுமே இடம்பெற்றிருக்கும்.
சான்றிதழ்: அந்த சான்றிதழில், பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம், மற்றும் பதிவு எண் போன்றவை தெரிந்து கொள்ள முடியும்.
அடமானம்: அதுமட்டுமல்ல, அந்த சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும், அதையும் அறிந்து கொள்ள முடியும்.. சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தந்திருந்தாலும், அதையும் வில்லங்க சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால், 2009ம் ஆண்டு நவம்ப மாதம், பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகிவிட்டது.. எனவே, அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்க சான்றிதழில் அதை கண்டுபிடிக்க முடியாது.. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால், அதையும் கண்டுபிடிக்க முடியாது.
தற்போதெல்லாம் வில்லங்க சான்றிதழுக்காக, விண்ணப்பிக்கும்போது, சான்று வழங்க காலதாமதம் ஆகிறது. அதனால், ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதியை பத்திரப்பதிவுத் துறை துவங்கி உள்ளது.
அந்தவகையில், தமிழகப் பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை பதிவிறக்கம் செய்யவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழை பார்ப்பதற்கு encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிக்கலாம் : நீங்கள் வாங்கும் சொத்து, பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச்சான்றிதழ் பெற முடியும். தமிழக பத்திரபதிவுத்துறையின் இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications