"கொல் = KILL.. தாக்கு = ATTACK" - இங்கிலீஷ் “பிச்சைக்கார” மொழி! தமிழ் இறை மொழி -சீமான் கண்டுபிடிப்பு
"பேச்சு. ஒரு S போட்டு SPEECH. அண்ணன் SPEECH சூப்பர் என்கிறார்கள். ஏன் பேச்சு என்று சொன்னால் என்னப்பா. அதில் S ஐ ஒட்ட வேண்டும் நீ. எங்களுடைய பஞ்சு. அதில் S போட்டு SPONGE."
சென்னை: தமிழில் உள்ள பல வார்த்தைகளை கடன் வாங்கி ஆங்கிலத்தை உருவாக்கியதாகவும், ஆங்கிலம் பிச்சைக்கார மொழி எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற செஞ்சமர் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீமானின் இந்த பேச்சு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆதிரை தமீம் அன்சாரி என்பவர் இயக்கத்தில் சிஜிஎம் பிக்சர்ஸ் - நாச்சியார் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் செஞ்சமர் என்ற படம் உருவாகி இருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய சீமான் ஆங்கிலம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகி உள்ளன.

இறைவனால் பேசப்பட்டது தமிழ்
அதில், "எனக்கு கொடுத்த இந்த அழைப்பதழ் தமிழில் இருந்தது. இந்த தமிழுக்காகவே நாங்கள் 60 ஆயிரம் பேர் போராடி இறந்தோம். ஒருவர் அமர்ந்து உருவாக்கிய மொழி தமிழ் இல்லை. வல்லூசி வைத்து ஒருவரால் உருவாக்கப்பட்டது இந்தி. எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. ஆனால், தமிழ் இறைவனால் பேசப்பட்டது.

தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தில்
மூதாதையர் முருகன், சிவன் பேசிய மொழி தமிழ். இறையனார்தான் எங்கள் சிவன். நீங்கள் பேசும் இங்கிலீஷ் நான் போட்ட பிச்சை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்னுடைய தாய்மொழியில் இருந்து கடன் வாங்கி உருவாக்கப்பட்ட மொழி. என்னுடைய கொல் அவனுடைய KILL. என்னுடைய காசு அவனுடைய CASH. என்னுடைய கலாச்சாரம் அவனுடைய CULTURE. என்னுடைய காசு அவனுடைய CASH.

பிச்சைக்கார மொழி
உடன். உடனே செய். SUDDEN. ஒரு S போட்டு SUDDEN. பேச்சு. ஒரு S போட்டு SPEECH. அண்ணன் SPEECH சூப்பர் என்கிறார்கள். ஏன் பேச்சு என்று சொன்னால் என்னப்பா. அதில் S ஐ ஒட்ட வேண்டும் நீ. எங்களுடைய பஞ்சு. அதில் S போட்டு SPONGE. என்னுடைய தாக்கு. அதில் A போட்டு ATTACK. அதுவே திருட்டுப்பய மொழி, பிச்சைக்கார மொழிய வைத்துக்கொண்டு அலையுறான். அதைபோய் அறிவு என்று எழுதுகிறாய்.

தமிழ் என்றால் புலி
வெள்ளைக்காரன் நன்றாக தமிழ் படித்து விட்டு எங்களுக்கு பாடம் நடத்துகிறான். ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் தமிழை நன்றாக கற்று தேம்பாவனி என்ற நூலை எழுதி விட்டு சென்றார். கூகுளில் முன்பு தமிழன் என்று எழுதினால் கூலி என்று வரும். இப்போது புலி என்று வரும். உண்மையில் நான் தான் ஃபாரின் ரிட்டன். என்னை படாதபாடு படுத்துவார்கள்.

அனைவரின் வேலை
இது ஒரு படம் அல்ல. படைப்பு. இதை எடுக்க துணிந்த இயக்குனரை பாராட்டுகிறேன். இது என்றுமே ஒருவரின் வேலை. கடமை இல்லை. ஒவ்வொருவரின் வேலை இது." என்று சீமான் பேசினார். தமிழ் குறித்து உயர்வாக சீமான் பேசிய நிலையில் ஆங்கிலத்தை அவர் தரக்குறைவாக பேசியது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications