"பெண்ணை மிரட்டி 6 மாதமாக பலாத்காரம் செய்த திமுக ஒன்றிய செயலாளர்”.. கொந்தளித்த எடப்பாடி!
சென்னை: விழுப்புரம் அருகே பெண்ணை மிரட்டி 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர், ஒரு பெண்ணை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 6 மாதங்களாக தொடர்ந்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வைத்துள்ளார். இதுதொடர்பாக அப்பெண் செய்தியாளர்களைச் சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார். வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 'காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் முக்கிய புள்ளி' எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக தான் இந்த முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications