பேஸ்மேக்கர் ரிப்பேர் ஆயிருச்சா? அவசரமாக சிசியூ -வில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மியாட் மருத்துவமனையில் இளங்கோவன் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் ஜனவரி 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதி மறுபடியும் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது.

அபார வெற்றி: இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதில் 66000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றார்.. இதையடுத்து, டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று சென்னை திரும்பியதுமே, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே, அன்றைக்கே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருதய பாதிப்பும், கொரோனா பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சைகள் விடாமல் தரப்பட்டன. இறுதியில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..
உடல்நலக்குறைவு: இந்நிலையில், தற்போது மீண்டும் இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, நேற்றுமுன்தினம், சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. நுரையீரல் சளி காரணமாக மூச்சுத் திணறல் அவருக்கு ஏற்பட்டதாகவும், தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. இன்னமும் வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடல் நலன் குறித்து போனில் விசாரித்தார்.. பிறகு, மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரித்துவிட்டு திரும்பியுள்ளார்.
அவசர பிரிவு: இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டிருந்த இளங்கோவன், கிரிட்டிக்கில் கேர் யூனிட்டுக்கு அவசரம் அவசரமாக இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நமக்கு பிரத்யேகமான தகவல் கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அந்த மெஷின் தற்போது வேலை செய்யவில்லையாம்.. இதனால், நுரையீரலில் தேங்கியுள்ள நீரையும் சளியையும் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், நார்மலுக்கு இன்னும் வரவில்லை என்றும், சீரியஸ் கண்டிசனில் தான் அவர் இருக்கிறார் என்றும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications