"நேற்றொரு தோற்றம்.. இன்றொரு தோற்றம்".. எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி ஓபிஎஸ்ஸை விமர்சித்த மைத்ரேயன்
சென்னை: நேற்றொரு தோற்றம், இன்றொரு தோற்றம் என எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி ஓபிஎஸ்ஸை அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரத்தில் நாள்தோறும் பல்வேறு ட்விஸ்ட்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த பிரச்சினை ஆரம்பித்த போது முதல் ட்விஸ்ட்! அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதுதான்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி போதிலிருந்தே ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார் மைத்ரேயன். இந்த நிலையில் இரட்டை இலையை பெற அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த போது, மைத்ரேயன் போட்ட பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி
அந்த பதிவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு 3 மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன, மனங்கள் என கேள்விக்குறியோடு குறிப்பிட்ட மைத்ரேயன் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என சூசகமாக பதிவிட்டிருந்தார்.

பொதுக் குழு கூட்டம்
கடந்த ஜூன் 14 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தின் போது செல்போன் எடுத்து செல்ல கூடாது என சக நிர்வாகிகள் கூறியதால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார் மைத்ரேயன். அன்றைய தினம்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோஷம் வெளிப்படையாக ஒலித்தது.

ஒற்றைத் தலைமை
இதைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் அணியினருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக ஜூன் 22 ஆம் தேதி பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அந்த சந்திப்பின்போது அவர் காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனமும் வெளியானது.

கடும் விமர்சனம்
அடுத்த நாளே ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ், மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிய போது மைத்ரேயனுக்கும் சொன்னார். அப்போது அவரும் தர்மசங்கடத்துடனே வணக்கம் சொல்லியதாக கருதப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஓபிஎஸ்ஸை கடுமையாக சாடி வருகிறார்கள்.

மைத்ரேயன் சாடல்
அந்த வகையில் முன்னாள் எம்பி மைத்ரேயனும் இணைந்து கொண்டார். இதுகுறித்து மைத்ரேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் இன்று 21/08/2017 அணிகள் இணைந்தன. 5 ஆண்டுகளுக்குப் பின் திருப்புமுனையில் நிற்கிறோம். தலைவர் பாடல் நினைவுக்கு வருகிறது.
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்.,.
பார்த்தால் பார்வைக்கு தெரியாது...
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது ...
என அதிமுக முன்னாள் எம்பி தனது ட்விட்டரில் ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார். இந்த பாடல் எம்ஜிஆர் நடித்த படகோட்டி திரைப்படத்தில் வரும் "நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி" என்ற பாடலாகும்.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications