Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயிர்க்கடன்.. விவசாயிகளுக்கு குஷி.. உரம், இடுபொருட்களில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் புது அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கூட்டுறவு அமைப்புகளில் வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன் குறித்து மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், 15 நாட்களுக்கு முன்பு அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..

Crop Loans Crop Credit Co Operative Societies Registrar Tamil Nadu Government


விவசாயிகள்:
அதில், "தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் நேர்வில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

புகார்கள்: பயிர்க்கடனில் அதிக அளவில் தகுதியுள்ள விவசாயிகள் பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதில் எவ்வித புகாரும் இருக்க கூடாது" என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

வலியுறுத்தல்: இதுகுறித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உழவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்களைப் பொறுத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இருப்பு கிடங்குகள்: மேலும், உடனடித் தேவையை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப்புக் கிட்டங்கிகளில் யூரியா 4,500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 3,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக தலைமையிலான அரசு வருடத்துக்கு சராசரியாக ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கிய நிலையில், தற்போதைய திமுக அரசு தொடர்ந்து ரூ.10,000 கோடியைத் தாண்டியிருக்கிறது.. நடப்பு நிதியாண்டில், அரசு பயிர்க்கடனுக்காக 16,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக 14,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடந்து முடிந்த பட்ஜெட்டின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், கே.ஆர்.பெரியகருப்பன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+