அஞ்சே நிமிஷம்.. ஜஸ்ட் ஆதார் கார்டு ஒண்ணு போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் பெறலாம்.. எப்படின்னு பாருங்க
சென்னை: ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..
அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

ஆவணங்கள்: அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு..
இவையெல்லாம் ஆதாரின் அவசியத்தை உணர்த்தக்கூடியவை என்றாலும், ஆதார் அட்டையை வைத்து, கடன்களை பெறவும் முடியும்.. பெரும்பாலும் நாம் தனிநபர் கடனை பெற அட்ரஸ், சொத்து மதிப்பு மற்றும் அடையாள சான்று இப்படி நிறைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது வரும். ஆனால், இப்போது வெறும் ஆதார் அட்டை இருந்தாலே போதுமாம்.. இதை மட்டும் வைத்து, வீட்டில் இருந்தபடியே 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை பெறலாம் என்கிறார்கள்.
எப்படி தெரியுமா? இப்போது பெரும்பாலான வங்கிகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி e-KYC செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன் செயல்முறை மிகவும் எளிமையானது. ஆன்லைனில், நீங்கள் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்.
ஆதார் மூலம் கடன் வழங்கும் வங்கிகள் : உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது. பாரத ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற இந்தியாவில் உள்ள பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் பெறலாம். இதனுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை மூலம் 2 லட்சம் வரை கடன் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும். உங்களுக்கான தொகை உடனடியாக விநியோகிக்கப்படும்.
ஆதார் அட்டை மூலம் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது :
- இதற்குப் பிறகு உங்களுக்கு OTP வரும். நீங்கள் அதை உள்ளிட வேண்டும்.
- பின்னர், நீங்கள் தனிநபர் கடன் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- நீங்கள் கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு, உங்களிடம் பான் கார்டு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அனைத்து தகவல்களும் வங்கியால் சரிபார்க்கப்படும். இதைச் செய்த பிறகு, உங்கள் கடன் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் கடன் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications