என்னது.. இதை சாப்பிட்டால் கொரோனா பரவுமா?.. திடீரென இணையத்தில் வைரலாகும் தகவலால் பரபரப்பு
முட்டைகோஸில் தொற்று பரவும் என தவறான தகவல் பரவி வருகிறது
சென்னை: காய்கறி மூலமும் கொரோனா பரவும் என்று உலக சுகாதார மையமே தெரிவித்துள்ளதாம்.. இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 வருடமாகவே உலகை ஆட்டி படைக்கும் கொரோனாவைரஸ் பரவலுக்கு தீர்வு இல்லை.. இது என்ன மாதிரியான வைரஸ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை..
அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வைரஸின் அறிகுறிகளும் தெளிவாக சொல்லப்படவில்லை..
ஒவ்வொரு நாளும் அறிகுறிகள் குறித்த புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.. மற்றொரு பக்கம் அறிகுறியே இல்லாமலும் தொற்று சிலரை தாக்குவதாக சொல்கிறார்கள்.

இதனிடையே, இந்த தொற்று பரவல் முட்டை கோஸ் மூலம் கொரோனாவைரஸ் பரவுகிறதாம்.. இதை உலக சுகாதா மையமே தெரிவித்ததாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது... யாருமே முட்டை கோஸ் சாப்பிடாதீங்க.. முட்டை கோஸில், கொரோனாவைரஸ் அதிக நேரம் தங்கி இருக்கும்...

அதாவது 30 மணி நேரங்களுக்கும் அதிகமாக இந்த வைரஸ் அந்த கோஸின் மீது தங்கியிருக்கும் சக்தி படைத்தது என்று அந்த வைரல் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அந்த தகவலில் கொஞ்சமும் உண்மையில்லை என்று தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
உலக சுகாதார மையத்தின் இந்திய அதிகாரியே இதை கூறியுள்ளார்.. இப்படி ஒரு விஷயம், உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் இடம்பெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications