யாருனு பார்த்தீங்களா.. நம்ம சின்னி ஜெயந்த் மகன்தான்.. திருப்பூர் சப் கலெக்டராக பதவியேற்றார்.. ஹேப்பி
சின்னி ஜெயந்த் மகன் திருப்பூர் சப் கலெக்டராக இன்று காலை பொறுப்பேற்று கொண்டார்
சென்னை: திருப்பூர் சார் ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகளும், உறவினர்களும் வாழ்த்து கூறினார்கள்.
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர கலைஞருமானவர் சின்னி ஜெயந்த்.. வழக்கமாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறைக்குள் செல்வதே வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த், தன் மகனை சிறந்த முறையில் படிக்க வைத்துள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தவையாகவே எனது முழு உழைப்பும் இருக்கும் என்று அப்போது சப் கலெக்டர் நம்பிக்கையுடன் கூறினார்.. அதுமட்டுமல்ல, என்னுடைய முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும் என்பதுடன், திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர், அவர்களுக்கு எனது நன்றி என்றார்.