பிரபல நடிகர் மோகன் சர்மா மீது கொடூர தாக்குதல்.. கண், கால்களில் பலத்த அடி.. சென்னையில் ஒரே பரபரப்பு
சென்னை: பிரபல நடிகர் மோகன் சர்மா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. தன்னை வழிமறித்து தாக்கியவர்கள் மீது மோகன் சர்மா போலீசில் புகார் தந்துள்ளார். என்ன நடந்தது?
மோகன் சர்மா திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், சினிமா தயாரிப்பாளரும் கூட.. இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தோடு சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வருகிறார்.

மோகன் சர்மா: இந்த நிலையில், சம்பவத்தன்று தி.நகர் சென்ற மோகன் சர்மா, அன்றைய தினம் இரவு, தன்னுடைய வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.. அப்போது ஹாரிங்டன் சாலை, 10வது அவென்யூ சந்திப்பில் மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் சர்மாவின் காரை வழிமறித்தனர்.. பிறகு, அவரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்..
இந்த தாக்குதலில் நடிகர் மோகன் சர்மாவுக்கு இரண்டு கண்களுக்கு கீழே காயமும், கால் மற்றும் கால் முட்டிகளில் சிராய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.. இதனையடுத்து உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோகன் சர்மா அனுமதிக்கப்பட்டார்.. அங்கு சிகிச்சை பெற்ற நடிகர் மோகன் சர்மா, சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், மர்ம நபர்கள் தன்னை தாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார்.
புரோக்கர்கள்: இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் முன்விரோதம் என்று சொல்லப்படுகிறது.. அதாவது, மோகன் சர்மா போயஸ் கார்டனில் தனக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க, கடந்த வருடம் தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தாராம்..
எனவே, சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 2 புரோக்கர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு, கடந்த வருடமே இந்த வீட்டை விற்பனையும் செய்திருக்கிறார்.
ஆனால், வீட்டை விற்பனை செய்த நாள் முதல், இடைத்தரகர்கள் 2 பேருமே அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருவதாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.. இதனால்தான், மோகன் சர்மாவுக்கும், புரோக்கர்களுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது.. இதை அடிப்படையாக வைத்தே, மோகன் சர்மா காரில் சென்றபோது அவரை தாக்கியாக தெரிகிறது.
போட்டோக்கள்: தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ள நிலையில், போலீசாரும் அது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்து, மூக்கில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்று வரும் மோகன் சர்மாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications