வேற மாதிரி சர்ப்ரைஸ்.. சென்னை ஏர்போர்ட்டில் காகித ஆவணமே இனி வேணாம்.. முகத்தை காட்டியே சல்லுனு போலாம்
சென்னை: சென்னை, கோவை விமான நிலையங்களில், காகித ஆவணங்களுக்கு பதிலாக, முக அடையாளத்தை காட்டி, பயணம் செய்யும் புதிய நடைமுறை இனிமேல் விரைவில் அமலுக்கு வருகிறது. டிஜியாத்ரா என்ற திட்டத்தின் கீழ் இந்த முறை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒவ்வொரு முறையும் விமான பயணம் மேற்கொள்பவர்கள், அனைத்து ஆவணங்களையும் ஏர்போர்ட்டுக்கு கொண்டு சென்று, அது தொடர்பான அனைத்து சோதனைகளையும் முடித்த பிறகே, ஃபிளைட்டில் ஏறவேண்டியிருக்கிறது.

பயணிகள்: இதனால், பயணிகள் விமானத்தில் ஏற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது... இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காகவே, விமான பயண செயல்முறையை காகிதமற்றதாக்கும், டிஜியாத்ரா என்ற திட்டம் கடந்த 2022ல் ஆரம்பிக்கப்பட்டது..
அதாவது பயணிகள் ஏர்போர்ட்டில் நுழைந்து, செக்கின் செய்து, உள்ளே சென்று ஃபிளைட்டில் ஏறும்போதும், பொருட்களை சரி பார்க்கும்போதும் தங்களது முகத்தையும் காட்டினால் மட்டுமே போதும். இதற்குபாஸ்போர்ட், ஆதார், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம், பயணத்திற்கான டிக்கெட் போன்ற எந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய தேவையில்லை..
அவசியமில்லை: விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் நாளன்று, இவற்றில் எதையுமே கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல, பாஸ்போர்ட்டை மறந்து வைத்துவிட்டோமே என்ற பயமும் தேவையில்லை.
இந்த டிஜியாத்ரா என்ற முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட் திட்டத்தின் மூலம், பயணிகளுக்கு நேரம் மிச்சமாகிறது.. ஏற்கனவே கேரள மாநிலம் - திருவனந்தபுரம், கர்நாடகா - மங்களூரு, ஆந்திரா - விசாகப்பட்டினம் உட்பட 14 ஏர்போர்ட்களிலும் இந்த டிஜியாத்ரா வசதி உள்ளதால், விமானப் பயணிகளும் நேரடியாகவே இந்த திட்டத்தின்மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். எனவே, அடுத்த மாதம் மேலும் 14 ஏர்போர்ட்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.
ஆனால், இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு அமைச்சகங்களில் நிறைய பணிகள் இருப்பதால், தனித்தனி ஒப்புதல் பெறுவதில் தாமதமாகி உள்ளதாம்.
மிகுந்த பயன்கள்: எப்படியும், சென்னை, கோவை ஏர்போர்ட்களுக்கு அடுத்த மாதமே இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்கிறார்கள்.. ஆனால், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், நடைமுறை சிக்கல்கள் தீருவதுடன், பயணிகளின் நேரமும் மிச்சமாகும் என்று நம்பப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications