11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு - விவசாயிகளுக்கு நல்ல செய்தி
2021-22ஆம் நிதி ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 2021-22ஆம் நிதி ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி பயிர்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ. பெரியசாமி குற்றச்சாட்டு
சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டினார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சபகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்து காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications