நாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு
சென்னை: நாளை முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் கட்டாயம் என்ற போதிலும் கூட, ஒரு சிறு தளர்வை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் சுங்க சாவடிகள் அனைத்திலும் பாஸ்டாக் கட்டாயம் என்று ஏற்கனவே நெடுஞ்சாலை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவேளை பாஸ்டாக் இல்லாத வாகனங்கள் என்றால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

எனவே ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள அனைத்து பாதைகளையும் 100% எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) வசதி கொண்டதாக மாற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும் குறுகிய காலமே இருப்பதால் அனைத்து வழிகளிலும் இதனை இன்னும் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், இந்த விதிமுறையில் சிறு, தளர்வு கொண்டு வந்துள்ளது மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம்.
இதன்படி ஒவ்வொரு டோல்கேட்களிலும் அதிகபட்சமாக 75 சதவீதம் வழி பாஸ்டாக் வசதி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். 25 சதவீத வழித்தடங்கள் பாஸ்டாக் இல்லாத வாகனங்களும் செல்ல கூடிய வழித்தடமாக இருக்கலாம்.
இன்னமும் நிறைய வாகன ஓட்டிகள் பாஸ்டாக் ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஓட்டவில்லை என்பதால், அவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே பாஸ்ட்ராக் வசதிகொண்ட பாதைகளில் அவர்கள் நுழைந்தால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்பதால் 25 சதவீத வழித்தடங்களை அவர்களுக்காக ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த வழித்தடங்களில் சென்று கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு, இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவது என்னவோ உறுதிதான். எனவே, கூடிய விரைவில் பாஸ்டேக் ஒட்டிக் கொண்டு பயணிப்பது உங்களுக்கு பலன் தரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications