தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தல்: நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.
Recommended Video

தமிழகத்தில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் அனைத்துக்கும் ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பிப்ரவரி 26-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 13, 14 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலாது.
வரும் 19-ந் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20-ல் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22-ந் தேதி கடைசி நாளாகும். மார்ச் 22 மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கும் நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களுடன் 2 பேர் மட்டுமே செல்ல முடியும். முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications