ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி சந்தோஷ் ரெட்டி கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேல்ஸ் நிறுவனம் ஈ.வி.பி சந்தோஷா ரெட்டியிடம் வாங்கிய சுமார் 34.75 ஏக்கர் நிலம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய நிறைவு சான்றிதழ்கள் இல்லை என்ற வேல்ஸ் குழுமம் புகார் அளித்தது. ரூ.23 கோடி மோசடி தொடர்பாக அளித்த புகாரில் சந்தோஷ் ரெட்டி, வினோத், கிரண் ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.













Click it and Unblock the Notifications