வடபழனி மெட்ரோ ரயிலுக்கு நாளை முக்கியமான நாள்..பூந்தமல்லி போரூர் மக்களின் கனவும் நிறைவேறுது
சென்னை: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை இறுதி ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை நிறுத்தங்களுடனும் மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வை மேற்கொள்ளும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது.
நாளை நடக்கும் ஆய்வின் முக்கிய அம்சங்களின் விவரம்
மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கு முன்பாக வழங்கப்படும் மிக உயரிய அனுமதி இந்த பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுதான். நாளை நடைபெறும் ஆய்வில் அதிகாரிகள் பின்வரும் விஷயங்களை நுணுக்கமாகக் கண்காணிக்க இருக்கிறார்கள்.

பிரேக்கிங் தொழில்நுட்பம்: ரயிலின் பிரேக் சிஸ்டம் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது சோதிக்கப்படும்.
தண்டவாள தரம்: அதிவேகமாக ரயில் செல்லும்போது தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் அதிர்வுகள் ஆய்வு செய்யப்படும்.
பயணிகள் பாதுகாப்பு: நடைமேடை கதவுகள், தீயணைப்பு வசதிகள் மற்றும் அவசரகால வெளியேற்ற வழிகள் உறுதி செய்யப்படும்.
கட்டுமான வசதி: ரயில் நிலையங்களின் தரம், மின்தூக்கிகள் (Lifts) மற்றும் படிக்கட்டுகளின் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
எங்கிருந்து எங்கே?
இந்த வழித்தடம் சென்னை மெட்ரோவின் வழித்தடம் 4-ன் (Corridor 4) ஒரு பகுதியாகும். இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரை உள்ள உயர்மட்டப் பாதையில் முதற்கட்டமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முக்கிய நிலையங்கள்: பூந்தமல்லி பணிமனை , பூந்தமல்லி புறநகர், குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி.
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. பூந்தமல்லி - போரூர் இடையிலான உயர்மட்டப் பாதை கட்டுமானப் பணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மிகத் தீவிரமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்டு இறுதி ஆய்வுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்குக் கிடைக்கும் நன்மை :
பூந்தமல்லி வடபழனி வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்வதற்கு ஆகும் பயண நேரம் பாதியாகக் குறையும். குறிப்பாக, ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களுக்குப் பெரிய விடுதலை கிடைக்க போகிறது. நாளை நடைபெறும் ஆய்வு திருப்திகரமாக அமைந்தால், அடுத்த சில வாரங்களிலேயே இந்த வழித்தடத்தில் பொதுமக்களுக்கான ரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications