சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. கரும்புகை, வெடித்து சிதறிய சிலிண்டர்!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2ஆவது பிளாக்கில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன. இந்த பகுதியில் சர்ஜிக்கல் பிளாக்கும் உள்ளது.
இந்த வார்டுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் வைத்துள்ள குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.

கல்லீரல் அறுவை சிகிச்சை
இந்த தீவிபத்து காரணமாக அருகில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவிற்கும் பரவியதாக தெரிகிறது. கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.

5 தீயணைப்பு வாகனங்கள்
தகவலறிந்த 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதாக தெரிகிறது. மேலும் சில உபகரணங்களும் வெடிக்கும் சப்தம் கேட்பதாகவும் தெரிகிறது. எனவே அந்த கட்டடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளாரகள்.

மா சுப்பிரமணியன் ஆய்வு
சம்பவ இடத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வருகை தந்து தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறார்கள். தீவிபத்து ஏற்பட்ட தளத்திற்கு மேல் தளத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வேறு ஒரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
இதுகுறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை. அது மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கும் குடோன் ஆகும். அந்த பகுதியின் மேல் தளத்தில் உள்ள நோயாளிகளும் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். தீ முழுவதும் அணைந்தால் மட்டுமே அந்த அறையில் வேறென்னவெல்லாம் இருந்தன என்பது தெரியவரும் என்றார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications