சென்னை தேனாம்பேட்டையில் பயங்கர சப்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீ.. திகுதிகுவென எரிந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பயங்கர சப்தத்துடன் மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பி.பி.கோயில் தெரு உள்ளது. இங்கு அருகே பாபு தெருவில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) உள்ளது. இது அதிக சப்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது.

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ அருகே இருந்த மாடு கட்டும் இடத்திற்கும் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பதறி அடித்து ஓடி வந்து மாடுகளை மீட்டனர். இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்து தீயை அணைத்தனர்.
இவர்கள் வேகமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திகுதிகுவென தீப்பிடித்து எரிந்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே வெப்பத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவிலாவது தூங்கலாம் என்றால் இது போன்ற இடர்பாடுகளால் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.












Click it and Unblock the Notifications