சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனை தீ விபத்து:47 குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் சேகர் பாபு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 47 குழந்தைகள் பாதுகாப்பாக மீடகப்பட்டுள்ளனர்; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவனையில் (கோஷா மருத்துவமனை அல்லது கஸ்தூரிபாய் மருத்துவமனை) இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த இந்த மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு, தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேகர்பாபு விளக்கம்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மருத்துவமனையின் 2-வது தளத்தில் மருத்துவர்கள் தங்கியிருக்கும் அறையின் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் புகை மூட்டம் பரவியது.

47 குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது புகை மூட்டத்தால் அவதிப்படும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் வர விருப்பம்
தீ விபத்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு வருகை தர இருந்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் மக்கள் கூட்டம் கூடுவர்; அதனால் தவிர்த்துவிடுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வரவில்லை.

உரிய நடவடிக்கை
இந்த மருத்துவமனையில் அனைத்து பகுதிகளும் உடனடியாக ஆய்வு செய்யப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications