சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் புகை.. அலறி துடித்த பயணிகள்! உடனடியாக நிறுத்தி ஆய்வு!
சென்னை: சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் புகை ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பயணிகளை கீழே இறக்கிவிட்டு, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் , கட்வால் ரயில் நிலையத்தில் நின்றபோது, திடீரென புகை கிளம்பியது. எக்ஸ்பிரஸ் ரயிலின் பி4 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர்.

அதிகாரிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு, புகை வந்த பெட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கட்வால் ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரத்தில் அடர்ந்த புகை சூழ்ந்ததால், மற்ற பயணிகள் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றனர்.
ரயில் பெட்டியில் புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்தால், கட்வால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
ஆர்எஸ்எஸ் தலைவர் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீச்சு.. உடைந்து சிதறிய கண்ணாடி.. 2 பேர் அதிரடி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications