Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 ஆண்டுகளில் இதுதான் மோசம்! தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அளவு 50 டிஎம்சியை தாண்டவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு குறைந்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டி காவிரி நீரைப் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பரிந்துரை அளித்தாலும் கர்நாடகா காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

 First time in 11 years, Cauvery water Tamilnadu realisation does not cross 50 tmc ft

இந்தாண்டும் கூட அதை நிலைதான். கர்நாடகாவில் மழை இல்லை.. எங்களுக்கு நீர் தேவை என்று சொல்லி காவிரி நீரை விட மறுத்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே, காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அளித்த பரிந்துரைப்படி மிகக் குறைந்த அளவில் நீர் கிடைக்கிறது.

காவிரி நீர்: இதற்குக் கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அங்கே கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பந்த் நடைபெற்றது. மேலும், நடிகர் சித்தார்த்தை மிரட்டி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் காவிரி நீர் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அளவு இந்தாண்டு 50 டிஎம்சியை தாண்டவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்திற்கு வெறும் 45.16 டிஎம்சி அடி மட்டுமே வந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 50 டிஎம்சி நீர் கூட வராமல் இருப்பது இது ஐந்தாவது முறையாகும்.

50 டிஎம்சி கூட இல்லை: பிலிகுண்டுலு அணையில் இருந்து வரும் நீரை கணக்கீடாகக் கொண்டு இந்த டேட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்யும் போது காவிரியில் இருந்து 50 டிஎம்சி அடி கூட வராமல் போவது இது ஐந்தாவது முறையாகும்.

இதற்கு முன்பு ஜூன் 2012 முதல் மே 2013 வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலம் வரை தமிழ்நாட்டிற்கு 40.15 டிஎம்சி அடி நீர் மட்டுமே கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நீர் கிடைத்துள்ளது. காவிரிப் பிரச்சினை உச்சத்தில் இருந்த 2016-17ஆம் ஆண்டில் கூட இதை விட அதிகமாகவே நீர் கிடைத்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு 53 டிஎம்சி அடி கிடைத்தது. ஆனால், இந்தாண்டு வெறும் 45.16 டிஎம்சி அடி மட்டுமே நீர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு கிடைக்கும்: 1974ஆம் ஆண்டு முதல் நம்மிடம் தரவுகள் இருக்கும் நிலையில், அதை ஆய்வு செய்து பார்க்கும் போது, 1987-88ஆம் ஆண்டில் தான் மிகக் குறைந்த அளவு நீர் நமக்குக் கிடைத்துள்ளது. அப்போது கர்நாடகாவில் இருந்து வெறும் 24.82 டிஎம்சி அடி நீர் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2003-04 ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நீரின் அளவு 75.56 டிஎம்சியில் இருந்து 109.89 டிஎம்சி அடியாக வரை இருந்துள்ளது.

இந்த டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது மீதமுள்ள எட்டு மாதங்களைச் சேர்த்தால் நமக்கு இந்தாண்டு 72 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்கலாம். கடந்த 1987-88, 2003-04 ஆண்டுகளிலும் இதே அளவு நீர் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணை விவரம்: கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவுக்குத் தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் அணைகளில் நீர் மட்டும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு சுமார் 1,000 கன அடியாக இருக்கிறது. அதேபோல அணையில் இருந்து திறந்து விடப்பட்டும் நீரின் அளவு 5,200 கன அடியாகவும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+