ஜெயலலிதா பெயரை ஏற்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநர்.. தவறாக செல்லி எடப்பாடி வெளிநடப்பு.. அனிதா பதிலடி
சென்னை: மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் மாற்றப்பட்டிருப்பதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநடப்பு செய்த நிலையில் அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் மாற்றப்பட்டிருப்பதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இந்த மசோதாக்களை ஆதரிக்கிறோம் என்று சொல்லியே பேசினார்.

மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரைவைவக்க வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்து அதில் அவர்கள் கருத்துக்களை எல்லாம் பேசிவிட்டார்கள். இப்போது வந்திருப்பது ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்கள், இங்கு அவையில் வைத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். இதில் அந்த குற்றச்சாட்டை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
எதற்காக எதிர்க்கட்சி தலைவர் அந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பது தெரியவில்லை.. மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாறியிருப்பதாக சொன்னார்கள். நிச்சயமாக மாற்றப்படவில்லை.. ஆனால் மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களில் அதுவும் ஒன்று. " இவ்வாறு அவை முன்னவர் கூறியதாக சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அவை முன்னவரான துரைமுருகன் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பெயரை மாற்றிவிட்டதாக உண்மையற்ற காரணத்தை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். இது தவறு என்று கூறினார். தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.. எந்த பெயரில் இருந்ததோ (ஜெயலலிதா பெயரில்) அந்த பெயரிலேயே தொடர்ந்து இருக்கின்றது. எனவே தவறான கருத்தை சொல்லி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார் என்பதை இந்த அவையில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications