காலில் விலங்கிட்டு துன்புறுத்தல்.. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் ஏற்பட்ட கொடூரம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விடுதலையான நிலையில், அவர்களின் காலுக்கு விலங்கிட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

பின்னர், இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீஸார் விசாரணைக்கு பின் பருத்தித் துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் காலில் விலங்கிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 31 மீனவர்களை மீண்டும் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித் துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
தமிழக மீனவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது கைகள், கால்களில் விலங்கு போடப்பட்டே சிறை அதிகாரிகளால் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். நீதிமன்றத்திற்கு வெளியே விலங்கிட்டு அழைத்து வரப்படும் மீனவர்களை வீடியோ எடுத்த ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனை யாழ்ப்பாண சிறையின் அதிகாரி கேமராவை தட்டிவிட்டு மிரட்டியதோடு, வழக்கு போடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். சிறை அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பத்திரிகையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர் மாணிக்கவேல் காலில் விலங்கிடப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு, இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications