காலில் விலங்கிட்டு துன்புறுத்தல்.. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் ஏற்பட்ட கொடூரம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விடுதலையான நிலையில், அவர்களின் காலுக்கு விலங்கிட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

பின்னர், இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீஸார் விசாரணைக்கு பின் பருத்தித் துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் காலில் விலங்கிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 31 மீனவர்களை மீண்டும் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித் துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
தமிழக மீனவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது கைகள், கால்களில் விலங்கு போடப்பட்டே சிறை அதிகாரிகளால் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். நீதிமன்றத்திற்கு வெளியே விலங்கிட்டு அழைத்து வரப்படும் மீனவர்களை வீடியோ எடுத்த ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனை யாழ்ப்பாண சிறையின் அதிகாரி கேமராவை தட்டிவிட்டு மிரட்டியதோடு, வழக்கு போடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். சிறை அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பத்திரிகையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர் மாணிக்கவேல் காலில் விலங்கிடப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு, இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications